கல்லூரியில் புகுந்து மாணவியை தாக்கிய இளைஞர்! வேடிக்கை பார்க்காமல் சக மாணவர்கள் எடுத்த முடிவு! பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


தன்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என கல்லூரி வகுப்பில் புகுந்து மாணவியை தாக்கிய இளைஞரை, மாணவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அமைந்துள்ள ''அரசினர் திருமகள் ஆலைக் கலை கல்லூரியில், பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாதனூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை, மாதனூர் முத்துமாரியம்மன் நகரை சேர்ந்த பிரசாத் [வயது 22] என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் அந்த மாணவி கல்லூரிக்கு புறப்பட்டு வந்தார். அப்போது, அம்மாணவியை கல்லூரி வகுப்பறை வரை பின்தொடர்ந்து பிரசாத் வந்துள்ளார். பின், கல்லூரி வகுப்பறையிலேயே மாணவியிடம், ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய், என் காதலை ஏற்றுக்கொள் இல்லையெனில், உன் புகைப்படத்தை ஆபாசமாக கிராபிக்ஸ் செய்து இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று பிரசாத் மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி, பிரசாத்தை சரமாரியாக திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த பிரசாத் மாணவியின் முகம், கழுத்து பகுதிகளில் மாறி மாறி தாக்கியுள்ளார். மேலும், மாணவியை தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்து கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேற முயன்றார்.

இதனை, பார்த்த மாணவியின் சக வகுப்பு மாணவர்கள், பிரசாத்தை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் அவர் கையில் இருந்த செல்போனை மீட்டு மாணவியிடம் கொடுத்த பின். பிரசாத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். 

இதனையடுத்து, பிரசாத்தை மாணவர்கள் குடியாத்தம் நகர காவல் நிலையத்துக்கு இழுத்து சென்றனர். அப்போது, சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக பிரசாத் கூறிவிட்டு, தப்பித்துவிட்டார். 

இதற்கிடையே, மாணவி குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர், தப்பி ஓடிய பிரசாத்தை உடனடியாக பிடித்து, அவர்மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், தாக்குதல், கொலைமிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college girl attacked in class room


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->