வீடியோ காட்சிகள் வெளியானது - கோவையில் எல்.கே.ஜி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதே பள்ளியில் அரங்கேறிய விபரீதம்..!
ciombatore school driver misbehave
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயக்க ஊசி போட்டு எல்.கே.ஜி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அதே பள்ளியில் மீண்டும் ஒரு விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் காரமடை அருகிலுள்ள பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளி பேருந்துகளில் வந்து செல்லும் வழக்கத்தை வைத்துள்ளனர். அந்த வகையில்., இப்பள்ளியில் எல்.கே.ஜி பயிலும் நான்கு வயதுடைய சிறுமி., பள்ளி பேருந்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமானது வெளிவந்துள்ளது.
பேருந்தில் வைத்து சிறுமிக்கு மயக்க ஊசியை செலுத்தி பாலியலை பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக பள்ளி பேருந்தின் ஓட்டுநர் மற்றும் அவரது உதறியாளரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு பேருந்தின் ஓட்டுநர் கோவிந்தராஜ் (வயது 37) மற்றும் அவரது உதவியாளர் மாரிமுத்து (வயது 55) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் தாக்கம் ஓய்வதற்குள் அதே பள்ளியை சேர்ந்த பள்ளி வாகன ஓட்டுனர் குடித்து விட்டு பள்ளி பேருந்தை இயக்கியுள்ளார்.
இதனை உடனடியாக கண்டறிந்த குழந்தைகளின் பெற்றோர் பேருந்தை சிறைபிடித்ததோடு மட்டுமல்லாது, பள்ளி நிர்வாகத்தினர் வந்தால் தான் பேருந்தை விடுவோம் என்று கூறி அதிர வைத்தனர்.
கோவை பள்ளியில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ciombatore school driver misbehave