தேர்தலன்று வாக்களிக்காத சினிமா பிரபலங்கள்! அதிர்ச்சி காரணம்!! - Seithipunal
Seithipunal



தமிழகம் முழுவதும் நேற்று முன்தினமான ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் சில திரைப்பிரலங்கள் ஓட்டு போட வராமல் இருந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாக்குச் சாவடிக்கு வந்தும் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் திரும்பிச் சென்றனர். அதன் பின் சிவகார்த்திகேயன் தான் வாக்களித்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார், ஓட்டுளித்ததற்கான அழியாத மை அடையாளமாக வைக்கப்பட்டு இருந்த விரலை செல்பி படம் எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.



 

சிம்பு தனது உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனில் உள்ளார். இயக்குநர் சுந்தர் சி-யும் விஷாலும் புதிய பட ஷூட்டிங்கில் துருக்கியில் உள்ளனர். நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் நடிக்கும்  படப்பிடிப்பில் போர்ச்சுக்கல்லில் இருக்கிறார்.

தேர்தல் தினத்தன்று முன்னணி நடிகர்களான தல அஜித், தளபதி விஜய், நடிகர் சூர்யா, கார்த்திக் போன்ற நடிகர்கள் மக்களுடன் மக்களாக சென்று வாக்களித்தனர். மேலும், எந்த சினிமா பிரபலங்கள் வாக்களிக்கவில்லை என ரசிகர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cine artist didn't vote in election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->