சின்னத்தம்பியை பார்த்து ஓட்டம் பிடித்த கும்கிகள்!! பொதுமக்கள் ஒருபுறம் ஓட அமளி துமளி!!  - Seithipunal
Seithipunal


கோவையில் பிடிக்கபட்டு டாப்சிலிப்பில் சின்னதம்பி யானை விடுவிக்கபட்டது. பின்னர், 9 நாட்களாக சின்னதம்பி உடுமலையில் சுற்றி வருகிறது. இன்னிலையில், நேற்று, கண்ணாடிபுத்தூர் பகுதியில் உள்ள கரும்பு காட்டில் சின்னதம்பி யானை புகுந்துள்ளது. 

எனவே, சின்னத்தம்பியை விரட்ட கும்கிகள் கலீம் மற்றும் மாரியப்பனை அவற்றின் பாகன்கள் அழைத்து சென்றனர். செல்லும் வழியில் கும்கிகளை வாய்க்களில் வைத்து குளிப்பாட்டியுள்ளனர். 

அதன், பின்னர் கரும்புக்கட்டுக்குள் கும்கிகளை அழைத்து சென்றனர். கும்கிகளை கண்ட சின்னத்தம்பி வடக்கு திசை நோக்கி ஓடியுள்ளது. அது ஓடுவதை பார்த்த கும்கிகள் அதற்கு எதிர் திசையில் தெறித்து ஓடியுள்ளது.

கும்கிகள் தலை தெறித்து ஓடுவதை கண்ட பொதுமக்கள் அவற்றிற்கு மதம் பிடித்துள்ளது என நினைத்து மறுபுறம் அலறியடித்து ஓடியுள்ளனர். ஓடிய கும்கிகளை அடக்க பாகங்கள் முயன்றும் தோல்வியுற்றனர்.

பின்னர், கேழே இறங்கி அவற்றின் பின்னாலேயே ஓடியுள்ளனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chinnathambi atrocities


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->