திருமணத்திற்காக சிறுவனை கடத்திய காதலி .!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 10-வது படிக்கும்  மாணவரை இளம்பெண் கடத்திச் சென்றதால், அந்த பெண்ணை  போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Image result for KIDNAPED

தர்மபுரி மாவட்டம் வேடகட்டமடுவு பகுதியைச் சேர்ந்த விவசாயி தசரதன். தசரதனின் மகன் தற்போது 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அந்த இளைஞ்சர்க்கும்         அவரது உறவினர் மகளுக்கும் இடையே பழக்கம் உண்டாகியுள்ளது. இதையறிந்த தசரதன், அவர்கள் இருவரையும் கண்டித்திருக்கிறார். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவர் காணாமல் போனதால் அவரது தந்தை தசரதன் போலீஸ் நிலையத்தில் புகா‌ர் கொடுத்திருக்கிறார்.

Image result for KIDNAPED
இதனை தொடர்ந்து மாணவரை கண்டுபிடிக்க புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த இளைஞ்சரை இளம்பெண் கடத்திச் சென்று பெங்களூரில் வைத்திருந்தது கண்டுபிடித்தனர். அதன் பின் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்த நிலையில், அந்த மாணவரை தற்போது  குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும், மாணவரைக் கடத்திச் சென்ற இளம் பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHILD WAS KIDNAPED BECAUSE OF LOVE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->