மாந்தோப்பில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..? பிஞ்சு மலரை கசக்கி எறிந்து காமுகன் அரங்கேற்றிய லீலை.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டுவட்டம், வர்த்தலாம்பட்டைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கட்டடத் தொழிலாளியான இவர் கடந்த 2015 பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கடைக்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை சாக்லேட் வாங்கிக் கொடுத்து 2 கி.மீ. தூரமுள்ள மாந்தோப்புக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.  இதைப் பார்த்த மாந்தோப்பு உரிமையாளர் முருகேசன், ராஜ்குமாரை பிடித்து தாக்கியதுடன் இதுதொடர்பாக வேப்பங்குப்பம் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, காவல்துறையினர் போக்சோ சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செல்வம், குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ராஜ்குமார் வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child rape youth gets jailed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->