தவமிருந்து ஆண்குழந்தையை பெற்றெடுத்த தாய்! செவிலியரின் மெத்தனத்தால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை!
child died in hospital for nurse care less
கோவை மாவட்டம் போத்தனூரை சேர்ந்தவர் விக்ரம். இவருடைய மனைவி பவித்ரா. பவித்ரா நிறைமாத கர்ப்பிணியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நேற்று முன்தினம் அதிகாலை சுகபிரசவத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அவருக்கு என்ன குழந்தை பிறந்தது என்றும், அந்த குழந்தையையும் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மருத்துவர்கள் காட்டவில்லை.
நீண்ட நேரத்திற்கு பிறகு குழந்தை இறந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனையடுத்து சோகத்துடன் குழந்தையின் உடலை பெற்றுக்கொண்டு உறவினர்கள் சென்றுவிட்டனர்.
இந்தநிலையில், நேற்று குழந்தையின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது இறந்த குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, பிரசவத்தின்போது குழந்தை பிறந்தவுடன் செவிலியர் குழந்தையை கையில் வைத்திருந்தபோது தவறி கீழே விழுந்து இறந்தது என தெரிந்தது.
இதனையடுத்து கடும் ஆத்திரமடைந்த உறவினர்கள் இறந்த குழந்தையின் உடலை கையில் ஏந்தி மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் செய்தனர்.
English Summary
child died in hospital for nurse care less