வானிலை மையம் விடுத்த அதிரடி எச்சரிக்கை.! தலைதெறித்து ஓடும் மக்கள்., பகலிலேயே பேயாக திரியும் கொடுமை.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்த வருடம் பெய்ய வேண்டிய பருவ மழையானது பெய்யாமல் அனைவரையும் ஏமாற்றிவிட்டு சென்றது. கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெயிலும் தனது கோர தாண்டவத்தை அரங்கேற்ற துவங்கியுள்ளது. 

அந்த வகையில்., கடந்த மாதத்தில் அதிகளவு பனிபெய்து மக்களை வாட்டி வதைத்து இருந்து வந்த நிலையில்., தற்போது வெயிலின் தாக்கமானது அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்., வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் கடுமையான வேதனைகளை சந்தித்து வருகின்றனர். 

வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாத பொதுமக்கள் இளநீர்., தர்பூசணி மற்றும் பழசாறு கடைகளை அதிகளவில் குவிய துவங்கினர். காலை முதலாகவே தொடர்ந்து வாட்டி வதைத்து வரும் வெயிலின் காரணமாக வெளியே செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி., கடந்த வருடத்தை காட்டிலும் சுமார் 40 நாட்களுக்கு முன்னதாகவே வெப்பத்தின் அளவானது அதிகரிக்க துவங்கியுள்ளது. வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு வெகுவாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும்., 8 ம் தேதிக்கு மேலாக வெப்பம் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்ஸியஸ் குறையலாம் என்றும்., சென்னையில் பகலில் வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில்., இரவில் மேக மூட்டத்துடன் காணப்படலாம் என்று தெரிவித்துள்ளது. 

மேலும்., சென்னையில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் வெளியில் செல்லும் சமயத்தில் முகத்தை மறைத்து கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில் வெயிலின் தாக்கமானது வெகுவாக அதிகரிக்கும் பட்சத்தில்., வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக உடல் முழுவதையும் துணியால் சுற்றிக்கொண்டு செல்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai weather report announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->