சென்னை மக்களே உடனே முந்துங்கள்.. இன்று இரவு உடன் முடிகிறது இலவசம்.!!
chennai metro free today
நேற்று முன்தினம் திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். மேலும், முதல்முறையாக திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து விமரிசனம் செய்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த மோடி அவர்கள், 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல்-டி.எம்.எஸ். வரையிலான புதிய மெட்ரோ வழித்தடத்தையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட மெட்ரோ ரயிலில் 10.2.2019 மாலை 6 மணி முதல் நாளை 11.2.2019 இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக இன்று (12.2.2019) மேலும் ஒரு நாள் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு வரை மெட்ரோ ரெயிலில் 2 வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுவரை மெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இன்றும் நாள் முடிவில் 3 இலட்சத்துக்கும் அதிமான பேர் இலவசமாக பயணிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.