6 ஆண்டுகளுக்கு முன் சென்னையை பதறவைத்த சம்பவம்..!! சிறுமியை கொடூரமாக பாலியல் சித்திரவதை செய்தவனுக்கு இன்று தண்டனை..!!! - Seithipunal
Seithipunal


கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை பாடி புதுநகர் பகுதியை சேர்ந்த 4½ வயது சிறுமியை இரவு முழுவதும் பாலியல் சித்தரவதை செய்த கொடூரனுக்கு நேற்று 26 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

27-1-2012 அன்று கடைக்கு பென்சில் வாங்குவதற்கு சென்ற 4½ வயது சிறுமியை சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35), முகப்பேர் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு ஆட்டோவில் கடத்தி சென்று சிறுமியின் உடல் முழுவதும் நகங்களால் கீறி இரவு முழுவதும் பாலியல் சித்திரவதை செய்துள்ளான்.

மறுநாள் காலை அந்த வழியாக பொதுமக்கள் சிறுமியுடன் இருந்த மணிகண்டனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றுள்ளனர், அனால் அந்தோ கொடூரன் பொதுமக்கள் மீது கற்களை கொண்டு தாக்கவே, முகப்பேர் ஜெ.ஜெ. நகர் போலீசார் விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்து வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், நேற்று குற்றவாளி மணிகண்டனுக்கு, ''சட்டத்திற்கு புறம்பாக சிறுமியை கடத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியதற்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிறுமியை அடித்து மிரட்டி துன்புறுத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்'' வழங்கி உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai little girl sexual abuse case judgements


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->