சென்னை பெண் செய்தியாளர் மரணம்.! பிறந்த நாளன்று உயிரிழந்த பரிதாபம்.!!
சென்னை பெண் செய்தியாளர் மரணம்.! பிறந்த நாளன்று உயிரிழந்த பரிதாபம்.!!
திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அங்கையற்கரசி, இவர் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில், செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தோழிக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், அதனை தனது குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என அங்கையற்கரசி முடிவு செய்துள்ளார்.
மேலும், நேற்று முன்தினம் மற்றும் நேற்று விடுமுறை தினம் என்பதால் அங்கையற்கரசி அவருடன் பணிபுரியும் சக ஊழியர்களான ஷாலினி, சதீஷ், கோகுல், ராம்குமார், பிரபுராஜ் ஆகியோருடன் தனது தோழியான ஷாலினியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காகவும் விடுமுறை தினத்தை கழிப்பதற்காகவும், திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், விடுமுறையை பிறந்த நாளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய ஷாலினி, சதீஷ், கோகுல், ராம்குமார், பிரபுராஜ் ஆகியோர் மட்டும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பொட்டிகுளம் அருகே எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலே ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றவர்கள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஷாலினியின் பிறந்தநாளான நேற்றே அவர் உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
chennai girl death in car accident