பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மக்களவை தேர்தல் நாளை நடைபெற உள்ளதால் வாக்காளர்கள் வாக்களிக்க பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வெளியூர்களிலிருந்து சொந்த ஊருக்கு வாக்களிப்பதற்காக அரசு பேருந்து, ரயில், ஆம்னி பேருந்துகளில் ஏராளமானோர் செல்கின்றனர். 

இதற்கிடையே மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்வதால் விமான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல ரூ. 3957ல் இருந்து ரூ. 12,716 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை - மதுரை விமான டிக்கெட் ரூ. 3674 இல் இருந்து ரூ. 8,555 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து மதுரைக்கு அதிகபட்சமாக ரூ. 11,531 டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Airfare hiked 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->