சென்னையில் பரபரப்பு! அடையாறில் தொடரும் தற்கொலை!!
சென்னையில் பரபரப்பு! அடையாறில் தொடரும் தற்கொலை!!
அடையாறு ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்தவர் மாணவி ரம்யா. இவர் நேற்று கோட்டூர்புரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் மாணவியின் உடலை தேடி வந்தார்கள்.
இந்நிலையில் அவரது உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ள மாணவி ரம்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அடையாறு நாளுக்கு நாள் தற்கொலை செய்துகொள்ளும் இடமாக மாறி வருகிறது. அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
English Summary
chennai adyar in student is suicide