அட பாவிகளா.! பிணத்தை கூடவா விட்டு வைக்க மாட்டிங்க.!! பிணத்தின் மீது கைவரிசையை கட்டிய மர்ம நபர்!!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான கொள்ளைச் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு வித்தியாசமான திருட்டு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் பிரபு, இவருடைய தாயார் வசந்தி நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக  உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து இறுதிச் சடங்குகளை செய்வதற்கான பணிகள் நடந்தது. 

உயிரிழந்த வசந்தி, வெள்ளிக்கிழமையன்று இறந்ததால் அவரின் தாலிச்சரடு, செயின் மற்றும் நகைகளை எடுக்காமல் மறுநாள் அடக்கம் செய்யும் போது சுடுகாட்டில் வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று உறவினர்கள் முடிவு செய்தனர். பின்பு மறுநாள் வசந்தியின் பிணத்தை சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது. 

அப்போது வசந்தியின் உடலில் இருந்து நகைகளை உறவினர்கள் கழற்றிய போது,வசந்தியின் காதில் இருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி மட்டுமே இருந்துள்ளது. ஆனால், அவர் அணிந்திருந்த தாலி சரடு மற்றும் தங்க சங்கிலியை காண வில்லை இதனைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சடலைத்தை எரித்த பின்பு, இதுகுறித்து அவர்கள் திருப்பத்தூர் போலீஸ் நிலையம் சென்று புகார் ஒன்றையும் அளித்துள்ளனர்.

வசந்தியின் மரணத்திற்கு, உறவினர்கள் கண்ணீருடன் அவரது உடல் மீது அழுது புரண்டனர். பின்பு சுடுகாட்டுக்கு உடல் கொண்டு செல்லும் போதும் அவரது சடலத்தை பிடித்துக் கொண்டு சிலர் அழுதபடி சிறிது தூரம் சென்றுள்ளனர். இந்நிலையில் அவரது சாவுக்கு வருந்துவது போல் நடித்த யாரோ ஒருவர்தான், நகைகளைத் திருடிச் சென்றிருக்க வேண்டும் என்று உறவினர்கள் அறிந்தனர். மேலும் இது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chain robbery to corpse from vellore district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->