மாநில அரசு இதைப் பற்றி எங்களிடம், கேட்கவேயில்லை..! மத்திய அமைச்சரின் அதிரடி பேட்டி….!
மாநில அரசு இதைப் பற்றி எங்களிடம், கேட்கவேயில்லை..! மத்திய அமைச்சரின் அதிரடி பேட்டி….!
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட, தமிழகத்தின் பகுதிகளைப் பார்வையிடுவதற்காக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்ர், நிர்மலா சீதாராமன், நாகப்பட்டினத்திற்கு வந்திருந்தார். அவர், புயலினால், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டார்.
பின், அவரிடம், அந்தப் பகுதியில் இருந்த பொது மக்கள், தங்கள் குறைகளைக் கூறினார்கள். பலர், இன்னும், முழு வீச்சாக, மீட்புப் பணிகள் நடைபெறவில்லை. புயல் சேதம் ஏற்பட்டவுடன், நீங்கள் ராணுவத்தை அனுப்பி இருந்தால், போர்க் கால அடிப்படையில், நடவடிக்கை எடுத்திருக்கலாம், என்ற கருத்தை முன் வைத்தார்கள்.
அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “மாநில அரசு கேட்டுக் கொண்டால் தான், மத்திய அரசு ராணுவத்தை அனுப்பி வைக்கும். ராணுவத்தை அனுப்புவதில், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அது பற்றி, மாநில அரசு எங்களிடம் எதுவும் கேட்கவில்லையே? என்றார்.
இதைக் கேட்டு, அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
English Summary
Central minister's statement