ஜெயலலிதா உயிரிழந்த தருணத்தில், மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில்... திடுக்கிடும் தகவல்..?
ஜெ. உயிரிழந்த போது மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக திவாகரன் மற்றொரு பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.
ஜெ. உயிரிழந்த போது மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக திவாகரன் மற்றொரு பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.
சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மன்னார்குடியில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் அவர் பேசும்போது, ஜெயலலிதா கடந்த 2016-ம் தேதி டிசம்பர் 4-ம் தேதியே இறந்துவிட்டார்.
அப்போலோ மருத்துவமனை பாதுகாப்புக்காக ஒரு நாள் தாமதமாக மரணம் அறிவிக்கப்பட்டது.
உடனடியாக ஏன் அறிவிக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, எங்களது மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் எனக் கூறினார்கள்" என்று தெரிவித்தார்.
இந்த தகவல் தற்போது தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மற்றுமொரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டு உள்ளார்.
அதில், ஜெயலலிதா உயிரிழந்த தருணத்தில், மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில் இருந்தததாகவும், தனக்கு வேண்டப்பட்டவருக்கு முதல்வர் பதவி வாங்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டதாகவும் மற்றொரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
English Summary
central govt pressure to select cm for tamilnadu