#Breaking_News எய்ம்ஸுக்கு தமிழகத்தில் இடம் உறுதிசெய்யப்பட்டது..! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!
#Breaking_News எய்ம்ஸுக்கு தமிழகத்தில் இடம் உறுதிசெய்யப்பட்டது..! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படுகிறது என அமைச்சர் உதயகுமார் அறிவித்தார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
தற்போது மேலூர் அருகே நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு உத்தரவை படித்து காட்டினார் அமைச்சர் உதயகுமார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி கடைசியில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகம், பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் டெல்லியில் உள்ளது போன்று அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பெருந்துறை (ஈரோடு), செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), தோப்பூர் (மதுரை), செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு 31.10.2014-ல் பட்டியல் அனுப்பப்பட்டது. இந்த இடங்களை மத்திய குழு ஆய்வு செய்த நிலையில் தற்போது மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
English Summary
Central Government Announcement AIMS Hospital At Madurai