எல்லா பிரச்சனைக்கும் செல்போன் தான் காரணம்! வைகோ புதிய விளக்கம்!
தற்போது நாட்டையே உலுக்கி வரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா பலாத்காரம் செய்து கொலை, உத்தரபிரதேசத்தில் 17 வயது சிறுமி பலாத்காரம், குஜராத்தில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை என பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் அடுத்தடுத்து சிறுமிகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து உள்ளது. இதனால் பிஜேபியின் மீது நாடு முழுவதும் கடும் கோவத்தில் மக்கள் உள்ளனர். பலரும் சமூக வலைத்தளங்களில் மோடிக்கு எதிராக பதிவுகளிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதிமுகவின் தலைவர் வைகோ அவர்கள், நாடெங்கும் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். வளர்ந்த நாடுகளில் சிறுவர்கள் செல்போன், கம்பியூட்டர், இணையதளம் பயன்படுத்த பெற்றோர்கள் அனுமதிக்கமாட்டார்கள். நாம் தான் நம் பிள்ளைகளிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
பாலியல் வழக்கில் கைது செய்யபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். மேலும் இதுபோல் குற்றங்கள் நடக்காமல் இருக்க கடுமையான சட்டங்கள் இயற்ற பட வேண்டும் என தெரிவித்தார். என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
cell phone is the reason for all the problems New description Vaiko