சாதி ரீதியாக.. காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி-தடியடி.!! தேவர் குளத்தில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் தேவர் குளத்தில் சாதி ரீதியாக செயல்படுவதாகவும் பொய் வழக்கு போடுவதாகவும் குற்றம் சாட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது முறையாக விசாரணை செய்யாமல் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக தேவர் குலம் காவல்துறையினரை கண்டித்து பிஎம்டி மக்கள் கழகம் சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தபடி இன்று காவல் நிலையத்தை முற்றுகை இடமோ என்று அவர்களை போலீசார் தடுத்ததால் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்கள் கலந்து செல்ல மறுத்ததால் தடியடி நடத்தப்பட்டது. இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருககும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவர பூமியாக மாறியது தேவர் குளம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Caste based police station besieged in thirunelveli


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->