பாஜகவுக்கு தான் என் ஓட்டு... பரபரப்பை கிளப்பிய காவலர் மீது வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் பின் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் தபால் வாக்குகளை இன்று மாலை 6 மணிக்குள் செலுத்தலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் தான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை வீடியோவாக வெளியிட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே வேம்பனியைச் சேர்ந்த சதீஷ்குமார் மத்திய ரிசர்வ் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் தபால் ஓட்டு செலுத்திய போது தான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

அதில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேவநாத யாதவுக்கு அவர் வாக்கு செலுத்தியதை பகிரங்கமாக தெரிவித்ததால் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பெயரில் காவலர் சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed against police who released PostalVote video


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->