கார் மீது லாரி மோதி கொடூர விபத்து! 5 பேர் பரிதாபமாக பலி!. - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி அருகே  ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி படுவேகமாக மோதியது. இதில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. அந்த காரை பின்தொடர்ந்து ஒரு லாரி 
சிறிது நேரத்தில் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், காரில் சென்ற ஒருவர் மற்றும்  லாரியில் சென்ற ஒருவர்  படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்து அங்கு மீட்புப்படையினர் விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car accident in hosur 5 people death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->