திடீரென பஞ்சரான கால்டாக்ஸி டயர்! தாறுமாறாக ஓடிய காரால் நேர்ந்த பெரும் விபரீதம்.! - Seithipunal
Seithipunal


சென்னை தேனாம்பேட்டை பகுதியில்  திரு.வி.க. குடியிருப்பில் வசித்து வந்தவர் சுபாஷ். 41 வயது நிறைந்த இவர்  கால்டாக்சி டிரைவராக பணியாற்று வருகிறார், இந்நிலையில் அவர் நேற்று காலை பயணி ஒருவரை ஏற்றி செல்வதற்காக வேளச்சேரியில் இருந்து தாம்பரம் நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார்.
 
அப்பொழுது அவர்கள் கிழக்கு தாம்பரம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் பஞ்சர் அடைந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார், தாறுமாறாக ஓடி, அவருக்கு எதிரில் வந்த  ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இதில் கால்டாக்சி டிரைவர் சுபாஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் எதிரில் வந்த ஆட்டோவின்  ஓட்டுநர் வடமலை மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள் பெரும் காயமின்றி உயிர் தப்பினர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car accident happaened by car wheel problem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->