காதலன் கைது! நீதிமன்றத்துக்கு ஆவேசமாக வந்த காதலி!!
காதலன் கைது! நீதிமன்றத்துக்கு ஆவேசமாக வந்த காதலி!!
திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை திருவள்ளுர் நீதிமன்ற வளாகம் வழக்கம்போல் பரபரப்பில் காணப்பட்டது. அப்போது அங்கு வந்த இளம் பெண் ஒருவர் திடீரென தன் கையில் வைத்திருந்த பிளேடால் கையை அறுத்து கொள்ள தொடங்கினார்.
இதனை கண்ட அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து சென்று அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தன்னுடைய பெயர் சங்கீதா என்றும், தன்னுடைய காதலன் எபினேசர் என்பவரை குற்றவழக்கில் காவல் துறை கைது செய்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் தனது காதலன் கைது நடவடிக்கையை கண்டித்தும், அவரை விடுவிக்க கோரியும் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறினார். பட்டப்பகலிலேயே இளம்பெண் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
boy friend arrested girlfriend was angry at the court