அடப்பாவிங்களா, எப்படி எல்லாம் திருடுறானுங்கப்பா.! ரத்த தானம் செய்த இளைஞரின் கிட்னியை திருடிய கொடுமை.!!
அடப்பாவிங்களா, எப்படி எல்லாம் திருடுறானுங்கப்பா.! ரத்த தானம் செய்த இளைஞரின் கிட்னியை திருடிய கொடுமை.!!
தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சீர்கேடு நடந்துள்ளதாக, சில மாதங்களுக்கு முன்பு பல புகார்கள் எழுந்தது. ஆனால் பல்வேறு இடங்களில் போலி மருத்துவர்களைக் கொண்டு உடல் உறுப்புகளைத் திருடி வரும் நிகழ்வு தன துளி கூட குறையாமல் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
இந்நிலையில், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ஒரு இளைஞரை ரத்த தானம் செய்ய அழைத்துச் சென்று அவரது கிட்னியை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ஷகிலா, இவரின் மகன் முகமது பக்ருதின். ஷகிலாவின் உறவினரான ராஜா முகமது. இவர் தன் மகனுக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்று கூறி பக்ருதினை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பக்ருதினை மருத்துவமனையில் அனுமதித்த பின்பு, ராஜா முகமது பக்ருதினின் தாயிடம், பக்ருதினுக்கு ரத்ததில் கோளாறு இருப்பதாகவும், அவனுக்கு ரத்தம் மாற்ற வேண்டும் என ஷகிலாவிடம் கூறினார். இதைக்கேட்டு பதற்றமடைந்த ஷகிலாவும் ஏமாந்து போய் அவர் கேட்ட இடத்தில் கையெழுத்து போட்டுள்ளார்.
ஷகிலாவிடம், ஏமாற்றி கையெழுத்து வாங்கிய ராஜா முகமது மருத்துவர்களின் உதவியோடு பக்ருதினின் கிட்னியை திருடியுள்ளார். பின்னர் இதனையறிந்த ஷகிலா அதிர்ச்சியடைந்து இதுகுறித்து ராஜா முகமதிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் ஷகிலாவை மிரட்டியுள்ளார். இதனால் ஷகிலா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார், இந்த புகாரை மருத்துவமனை நிர்வாகம் முழுவதுமாக மறுத்துள்ள நிலையில் போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
blood donar kidney is robbery