அண்ணாமலைக்காக கை விரலுக்கு வெட்டு.. பாஜக பிரமுகரின் வெறிச்செயல்.!!
BJP cadre cut his finger for annamalai
தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோவை மக்களவைத் தொகுதி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரவாக்கு சேகரிப்பையில் ஈடுபட்டனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த தொகுதியில் போட்டியிடுவதால் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடலூர் மாவட்ட பாஜக துணை தலைவராக இருக்கும் கடலூர் மாவட்டம் ஆண்டாள் முள்ளி பாளையம் பகுதியைச் சேர்ந்த துரை ராமலிங்கம் என்பவர் கோவை நாடாளுமன்ற தொகுதியில் அண்ணாமலைக்காக தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வீடு வடாக சென்று பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்துள்ளார். இவர் நேற்று மாலை 5 மணி அளவில் தனது பிரச்சாரத்தை முடித்த நிலையில் திடீரென தனது இடது கை ஆள்காட்டி விரலை கத்தியை எடுத்து துண்டித்துக் கொண்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தன் பிரச்சாரம் செய்தபோது அருகில் இருந்தவர் அண்ணாமலை தோல்வியை சந்திப்பார் என கூறியதால் அவர் வெற்றி பெற வேண்டி தனது கைவிரலை துண்டித்துக் கொண்டதாக பாஜக பிரமுகர் துரை ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP cadre cut his finger for annamalai