சிதம்பரத்தில் வீடு புகுந்து கொள்ளை..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள கனகசபை நகரில் ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் கனகசபை நகர் 9வது குறுக்கு தெருவில் கொளஞ்சியப்பன்(58) என்பவர் வசித்து வருகிறார், கடந்த சில தினங்களுக்கு முன் கொளஞ்சியப்பன் சென்னையில் உள்ள தன் மகளையும், குழந்தையையும் பார்க்க சென்றிந்தார்.

இந்நிலையில், நேற்று காலை கொளஞ்சியப்பனின் வீடு கதவு திறந்து கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து விட்டு அவருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பதறிப்போய் ஓடிவந்த கொளஞ்சியப்பன், வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், கொள்ளையர்கள் அந்த பகுதியிலேயே இருக்கலாம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BIRO PULLING IN CHIDAMBARAM CITY SIDE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->