மக்களே உஷார்! வேலை நிறுத்தம் மற்றும் தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை!
மக்களே உஷார்! தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை!
பொதுத்துறை வங்கி அதிகாரிகள் சம்பள உயர்வு கேட்டும், பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் இன்று (21.12.2018) பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
இதற்காக அகில இந்திய வங்கி அதிகாரிகள் அறிக்கை படி நடக்கிற இந்த வேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், நாளை 22-ஆம் தேதி 4-வது சனிக்கிழமை என்பதாலும், நாளை மறுதினம் 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவ்விரு நாட்களும் வங்கி விடுமுறை நாட்கள் ஆகும். மேலும் 25-ஆம் தேதி செவ்வாய் கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.
இதனையடுத்து 26-ஆம் தேதி புதன்கிழமை அன்றும் வேலை நிறுத்தம் செய்ய 9 வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. எனவே அன்றும் வங்கிச்சேவை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.