துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை சம்பவம்..!! குற்றவாளி கண்டு அதிர்ந்த போன போலீசார்..!!
துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை சம்பவம்..!! குற்றவாளி கண்டு அதிர்ந்த போன போலீசார்..!!
கடந்த சில தினங்களுக்கு முன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளை துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடை பெற்றது. இதில், தீவிர விசாரணை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சம்பவம் நடந்த அன்று, மதியம் 2 மணி அளவில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கிளைக்கு வந்த 2 பேர், டிடி எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த பணியாளர்களிடம் கூறியுள்ளனர். மதிய உணவு இடைவேளை என்பதால் 3 மணிக்கு மேல்தான் டிடி எடுக்க முடியும் அவர் தெரிவிக்கவே, வெளியேறிய இருவரும் அடுத்த சில நிமிடங்களில் மேலும் 3 பேரை அழைத்துக்கொண்டு வங்கியில் நுழைந்து, மேலாளர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வங்கியில் உள்ள பணத்தை எடுக்கச் சொன்னார்கள்.
அவர் மறுக்கவே, லாக்கர் அறையில் தரையை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். லாக்கரை திறந்தவுடன், அதில் வைக்கப்பட்டிருந்த 80 கிராம் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு, ரூ.6 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு, வங்கிக்குள் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்யும் எடுத்து கொண்டு தப்பினர்.
இதுகுறித்து, மன்னார்குடி போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் வங்கிக் கொள்ளையில் வங்கி ஊழியர்களே உடநதைதயாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முத்துக்குமார், மீரான் மைதீன், மரிய செல்வம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
BANK ROBBERY CASE 4 BANK STAFF ARRESTED