ஆட்டோவில் கழுத்தறுபட்ட பெண் சாவு! தப்பிய வாலிபர் பிடிபட்டார்!! அதிர்ச்சியான பின்னணி!!!
ஆட்டோவில் கழுத்தறுபட்ட பெண் சாவு! தப்பிய வாலிபர் பிடிபட்டார்!! அதிர்ச்சியான பின்னணி!!!
நேற்று முன் தினம், பழனி அடிவாரம், பழைய காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ஆட்டோவில், ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் பயணித்த போது, ஓடும் ஆட்டோவில் இருந்து, வாலிபர் தப்பி ஓடினார்.
உடன் வந்த பெண்ணை, தன் கையில் வைத்திருந்த பிளேடால், அவரது கழுத்தில் ஆழமாகக் கிழித்துள்ளார். இதனால், அந்தப் பெண், உடனடியாக, பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
பின், மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப் பட்டார். ஆனால், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு, சிகிச்சை பலன் இன்றி, அந்த இளம் பெண் மரணம் அடைந்தார்.
அதே நேரம், அந்தப் பெண்ணைக் கொன்று விட்டுத் தப்பிச் சென்ற வாலிபரை போலீசார், பொள்ளாச்சியில் வைத்துக் கைது செய்தனர்.
இதன் பின்னணியை விசாரித்த போது, திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இறந்த பெண்ணின் பெயர் பவித்ரா (வயது 24). கொலை செய்த வாலிபரின் பெயர் மாயவன் (வயது 26).
இவர்கள் இருவரும், அண்ணன், தங்கை உறவு முறையினர். இருந்தாலும், மாயவன், பவித்ராவை ஒரு தலையாகக் காதலித்துள்ளார். ஆனால், அதனை பவித்ரா ஏற்கவில்லை.
மேலும், பவித்ராவிற்கு, சமீபத்தில், வேறொருவருடன் திருமண நிச்சயம் நடைபெற்றது. இதனால், அதனை நிறுத்தும் படி பவித்ராவிடம் கூறி உள்ளார். அவரைச் சமாதானம் பேசி, ஆட்டோவில் அழைத்து வந்த போது தான், அந்தப் பெண்ணைக் கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம், பழனி அடிவாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.