மீண்டும் ஓசி பிரியாணி பிரச்சனை!! அடிவாங்கிய ஓட்டல் வேலையாட்கள்!! அத்துமீறும் கும்பல்!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, புதிய பஸ் நிலையம் அருகில், உள்ள பிரியாணி கடை ஒன்றில் மூன்று இளைஞர்கள் பணமின்றி உணவு கேட்க, மறுத்த கடைக்கார ஊழியர்கள் தாக்கப்பட்டனர்.

பொன்னேரி, புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள பிரியாணி கடையில், இரவில் கடைக்கு வந்த 3 வாலிபர்கள் பணம் கொடுக்காமல் பிரியாணி, காடை வருவல் கேட்டனர். இதனை கடையில் இருந்த ஊழியர்களான வசிம் மற்றும் லிசன் ஆகியோர் கண்டித்தனர்.

இதனால் அந்த 3 வாலிபர்களும் ஆத்திரம் அடைந்து வசிம் மற்றும் லிசனை சரமாரியாக தாக்கினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர், மேலும், ஆலாடு பகுதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ், கும்மங்குளம் பாலாஜி ஆகிய 2 பேரை கைது செய்தனர் மற்றும் பரிக்கபட்டை பிரகாசை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attacking hotel employee for free food


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->