ஆந்திராவில் உயிரழந்தவர்களுக்கு 9 இலட்சம் நிதி உதவி.! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் மாநிலத்தில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து, சரக்கு லாரியில் மாங்காய்  ஏற்றி கொண்டு ஆந்திரா மாநிலம் குப்பதில் வனப்பகுதி வழியே செல்லும் போது அங்குள்ள ஒரு வளைவில் லாரி 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10-பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும், இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், லாரி அதிவேகத்தில் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர்.  இதில் காயமடைந்தவர்கள் 20 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில் உயிரிழந்த வேலூர் மாவட்டம் கல்நார்சம்பட்டி கிராமத்தை  சேர்ந்தவர்கள் ஆவார். உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்!

மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கவும் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anthra Pradesh Accident Vellore Tamilar Helped TN CM


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->