மகளை கடித்த சிறுத்தை..! விறகால் அடித்து விரட்டிய தாய்..!! கோவையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!!
மகளை கடித்த சிறுத்தை..! விறகால் அடித்து விரட்டிய தாய்..!! கோவையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!!
கோவை அருகே மகளை கடித்து இழுத்துச்செல்ல முயன்ற சிறுத்தையை, தாய் அந்த சிறுத்தையை விறகால் அடித்து விரட்டி மகளை காப்பற்றியுள்ளார்.
கோவை மாவட்டம், வால்பாறையை அருகே பெரியகல்லார் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருபவர் முத்துமாரி. இவரின் மகள் சத்தியா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை தாயும் மகளும் தங்களது வீட்டின் பின்புறம் சமையலுக்காக விறகுகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அந்நேரம் பார்த்து அந்த இடத்தில மறைவாக பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று, திடீரென சிறுமி சத்யாவின் மீது பாய்ந்து வந்து, கழுத்தை கவ்வி இழுத்துச்செல்ல முயன்றது.
இதனை சற்றும் எதிர் பார்க்காத தாய் முத்துமாரி, தன கையில் விறகு கட்டையால் சிறுத்தையை சரமாரியாக தாக்கி விரட்டியடித்து, தன் மகளை சிறுத்தையிடம் இருந்து மீட்டார்.
இருப்பினும், சிறுத்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த மகள் சத்யாவை உடனடியாக அருகில் உள்ள வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தற்போது சிறுமியின் உடல்நிலை தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாய் முத்துமாரியின் வீர செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
English Summary
ANIMAL ATTACK A LITTLE GIRL