பேருந்தில் பயணித்த போது, இறந்து போன மூதாட்டியை, சாலையில் வீசிச் சென்ற, தனியார் பேருந்து கண்டக்டர், டிரைவர்…! மரித்துப் போனதா மனித நேயம்…? - Seithipunal
Seithipunal


 

வேலுார் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து, வேலுார் புதிய பேருந்து நிலையம் செல்வதற்காக, மூதாட்டி ஒருவர் தனியார் பேருந்து ஒன்றில் ஏறினார்.

அந்தப் பேருந்து, காட்பாடியிலிருந்து பாகாயம் என்ற ஊர் வரை செல்லும் பேருந்து.

அந்த தனியார் பேருந்து, சித்துார் பேருந்து நிலையத்தின் அருகே வந்த போது, பேருந்தில் பயணம் செய்த, அந்த வயதான பெண்மணிக்கு, திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது.

நெஞ்சு வலியால் சிறிது நேரம் துடித்தார். பின், அப்படியே, சரிந்து விழுந்தார். இதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், இந்த செய்தியை, அந்த பேருந்தின் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கூறினர்.

உடனே அந்தப் பேருந்து நிறுத்தப் பட்டது. அந்தப் பெண்மணியின் அருகே சென்று பார்த்த போது, அவர் இறந்து போனது தெரிய வந்தது. அவருடன் யாரும், உடன் வரவில்லை.

இந்த நிலையில், மனிதாபிமானமற்ற, அந்தப் பேருந்தின் டிரைவரும், கண்டக்டரும் அந்தப் பெண்மணியின் சடலத்தை, சித்துார் பேருந்து நிலையத்தின் அருகே, சாலை ஓரத்தில், அந்தப் பெண்மணியின் பிணத்தைக் கிடத்தினர். பின், அவர் கொண்டு வந்திருந்த பையில் இருந்த ஒரு சால்வையை எடுத்து, அவரது உடலை மூடி விட்டு, பேருந்தை எடுத்துச் சென்று விட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் விசாரணை செய்த போது, இறந்தவரின் விபரம் தெரிய வந்தது. அவர் பெயர் பூஷணம் (வயது 60). பெங்களுரில் உள்ள தன் உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பிய போது, மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

கொஞ்சம் கூட மனிதாபிமானம் இன்றி, இந்தப் பெண்மணியின் உடலை வீசிச் சென்ற, அந்த பேருந்து ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an old lady died by heart attack in a private Bus.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->