நான்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள்!!
AMMK candidates anounced
வரும் மக்களவை தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. காலியாக உள்ள சட்டமன்றங்களில், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது
இந்தநிலையில், இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதற்கிடையே சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் காலியானது. இந்த நிலையில், காலியாக உள்ள இந்த 4 தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தநிலையில், வரும் மே மாதம் 19ஆம் தேதி, தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சூலூர் தொகுதியில் சுகுமரும், அரவக்குறிச்சியில் சாகுல் ஹமீதும், திருப்பரங்குன்றத்தில் மகேந்திரனும், ஒட்டப்பிடாரம் தொகுதியில், சுந்தரராஜும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.