இன்று யாருக்கு வெற்றி..? அதிர வைத்த அழகிரியின் பேட்டி - கலங்கி போன திமுக கழக உடன் பிறப்புக்கள்.! - Seithipunal
Seithipunal


யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி வாக்களித்த பின் பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சியை தீர்மானிக்கும் வகையில் இன்று மக்களவை தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் காலை 7 மணியில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சொந்த ஊரில் வாக்களித்து வருகிறார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

முக அழகிரி கடந்த மக்களைவை தேர்தலின் போது, திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் மண்ணை கவ்வும் என்று தனது கணிப்பை கூற, அச்சு அசலாக, திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் மண்ணை கவ்வியது.

ஆக.. உண்மையில் இதுவல்லவோ கணிப்பு என்று உலக ஊடகங்களே அவரை பாராட்ட துடித்து இருக்கும். ஆனால் இந்த கணிப்பு விவகாரம் உலக ஊடங்களுக்கு தெரியாமல் போனது தான் வேதனை.

முன்பெல்லாம் தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தால் அழகிரி, திமுகவே வெற்றி பெறும் என்றும், மக்கள் திமுகவின் பக்கமே நிற்பார்கள் என்றும் கூறுவார்.

ஆனால் ஸ்டாலினுடனான அதிகாரப்போட்டியால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரி, இப்போது அளித்த பேட்டியில், யார் வெற்றி பெற வேண்டும் என மக்களே தீர்மானிப்பார்கள் என சொல்லிவிட்டு சென்றுள்ளதை கேட்டு திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

algiri told about which party will win


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->