இந்த இடத்துல உட்கார்ந்து குடிக்கலாமா போங்கடா என்று கூறிய காவலருக்கு நேர்ந்த கொடூரம்.,மிருகமாக மாறிய போதை ஆசாமிகள் .!
இந்த இடத்துல உட்கார்ந்து குடிக்கலாமா போங்கடா என்று கூறிய காவலருக்கு நேர்ந்த கொடூரம்.,மிருகமாக மாறிய போதை ஆசாமிகள் .!
பள்ளி வளாகத்தில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை தட்டி கேட்ட தலைமைக் காவலர் பாட்டிலால் தாக்கப்பட்டு, கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மோகன்ராஜ். இவர் நேற்று இரவு
பணிக்கு சென்று கொண்டிருந்தபோது வழியில் உள்ள அரசுப்பள்ளி கட்டிடத்தில் அமர்ந்து சில நபர்கள் மது அருந்தியுள்ளனர்.
இதைப்பார்த்த மோகன்ராஜ் அந்த கும்பலை கண்டித்து அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அந்த காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றவே அவர்கள் திடீரென தங்கள் கையிலிருந்த மது பாட்டிலால் மோகன்ராஜ் தலையில் அடித்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை கல்லால் தலையில் கடுமையாக தாக்கி பாட்டிலை உடைத்து மோகன்ராஜ் வயிற்றில் குத்திவிட்டு ஓடியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். பின் காலையில் அப்பகுதி வழியே சென்றவர்கள் அவரை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோகன்ராஜை கொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தவறை தட்டி கேட்ட காவலரையே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Alcoholics at the school premises for denounce that the gang killed the policeman