மீண்டும் தூத்துகுடியில் போலீஸ் அராஜகம்..! நள்ளிரவில் நடக்கும் அட்டூழியங்கள்..!! சொந்த ஊரை விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் மக்கள்..!!!
மீண்டும் தூத்துகுடியில் போலீஸ் அராஜகம்..! நள்ளிரவில் நடக்கும் அட்டூழியங்கள்..!! சொந்த ஊரை விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் மக்கள்..!!!
நள்ளிரவில் போலீசார் வீடுகளை உடைத்து, இளைஞர்களைப் பிடித்து கைது செய்வதால்…ஊரையே காலி செய்த மக்கள்….
கடந்த 22-ஆம் தேதி, துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அங்குள்ள மக்கள் பெருந்திரளாகப் போராட்டம் நடத்தினர். இதி்ல் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், 13 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
மேலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி, 20-க்கும் மேற்பட்ட போலீஸ் குழு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
துாத்துக்குடி நகர் முழுவதும், நள்ளிரவில், டார்ச் லைட்டை அடித்து, வீட்டின் கதவை உடைத்து, உள்ளிருக்கும் இளைஞர்களைக் கைது செய்து செல்கின்றனர் போலீசார்.
துாத்துக்குடிக்கு அருகில் உள்ள மடத்துாரில், கடந்த இரண்டு நாட்களாக, அதிகாலை 4 மணிக்கு, வீடுகளின் கதவை உடைத்து கும்பலாக உள்ளே புகுந்து செல்லும் போலீசார், அங்கு இளைஞர்கள் இருந்தால், அவர்களை அடித்து, இழுத்து போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இதனால், பெண்கள் வீட்டில் நிம்மதியாகத் துாங்க முடியவில்லை. போலீசாரின் இந்த அடாவடியான நடவடிக்கைக்குப் பயந்து, மடத்துார் கிராமத்தில் வசிக்கும் அனைவரும், ஊரைக் காலி செய்து விட்டு, ஊருக்கு வெளியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் முன்பாக துாங்குகின்றனர்.
இது பற்றி அவர்கள் கூறும் போது, வீட்டிற்குள் போலீசார் அத்து மீறி நுழைந்து, இளைஞர்களை, கை கால்களை உடைத்து, இழுத்துச் செல்கின்றனர். இது தொடர்ந்தால், நாங்கள் ஊரை விட்டு வெளியேறி, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று கூறி உள்ளனர்.
English Summary
again police atrocity in thoothukudi