23 கிராமங்களில் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்.எல்.சி! அதிமுக எம்பிக்கள் எடுத்த அதிரடி முடிவு !! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டிற்கு மின்சாரமும், வேலைவாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த 23 கிராம மக்கள் தங்களின் நிலங்களைக் கொடுத்ததால் அமைக்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம் இப்போது அதன் நோக்கங்களை மறந்து, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  இணையாக மக்களைச் சுரண்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. 

ஏற்கனவே சுரங்கம் 1, சுரங்கம் 1-ஏ, சுரங்கம் 2 என 3 நிலக்கரி சுரங்கங்களை என்.எல்.சி அமைத்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் நிலக்கரியில் தனது தேவைக்கு போக மீதமுள்ள நிலக்கரியை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டி வருகிறது. இவை போதாதென சுரங்கம்-3 என்ற பெயரில் நான்காவது  சுரங்கம் அமைக்க முடிவு செய்து அதற்காக பெருமளவு நிலங்களைக் கையகப்படுத்த உத்தேசித்துள்ளது. 

புதிய நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்தவுள்ள நிலங்களின் பரப்பு 12,125 ஏக்கர் ஆகும். 

இதனிடையே,  நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாமக சார்பில் அன்புமணி போராட்டம் நடத்தினார். இது மட்டுமல்லாமல், ஆங்காங்கே மக்களும், பல சமுக நல அமைப்புகளும் இணைந்து போராட்ட நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் என்.எல்.சி விரிவாக்கம் கூடாது என தமிழக எம்பிக்கள், மத்திய அமைச்சரிடம் கடிதம் வழங்கினர்.

கடலூர் - புவனகிரி தொகுதிக்கு உட்பட்ட 40 கிராமங்களில் என்எல்சி இந்தியா நிறுவனம், சுரங்க விரிவாக்கம் செய்யக் கூடாது என  மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், அதிமுக எம்பிக்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி ஆகியோர் கடிதம் வழங்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MP Meet Central Minister


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->