ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு இது தான் காரணம்!! கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அதிரடி!!
admk government is the reason for jacto-jeo protest
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவரான ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்திக்கையில், " அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தவறான அணுகுமுறைகள் தான் முக்கிய காரணம். இதற்கு முற்றிலும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும்,
ஆளும்கட்சி உடனடியாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும். நாள், அதை செய்யாமல் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது சரியானதாக இருக்காது என்றும்,
மேலும், கொடநாடு கொலைகள் சம்பவம் பற்றிய தகவல்கள் ஒரு ஹாலிவுட் திரில்லர் படம் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. இந்த கொடநாடு விஷயத்தில் சி.பி.ஐ. நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு, முக்கிய காரணமான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்,
வரும் மக்களவை தேர்தலில் தேசிய அளவில் புதிய அணி உருவாக வாய்ப்பில்லை. இருப்பினும், பாஜக.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் மற்ற அனைத்து கட்சிகளின் நோக்கமாக இருக்கின்றது. வரும் தேர்தலில் பாஜக நிச்சயம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாடுபடும் என்றும்' அவர் கூறியுள்ளார்.
English Summary
admk government is the reason for jacto-jeo protest