அரசு அலுவலகத்தில் அதிமுக கவன்சிலர் வெட்டி கொலை! - Seithipunal
Seithipunal


வேலூர் அருகே பட்ட பகலில் அரசு அரசு அலுவலகத்தில் அதிமுகவின் முன்னால் கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவகத்தில் இன்று காலை அதிமுகவின் முன்னால் கவுன்சிலர் மகேந்திரன் சில அலுவலக விடயமாக வந்துள்ளார். 

இதனை அறிந்த சில மர்ம நபர்கள் கத்தி அரிவாளுடன் வட்டார வளர்ச்சி அலுவகத்தின் உள்ளே நுழைந்து அங்கு இருந்த அதிமுகவின் முன்னால் கவுன்சிலர் மகேந்திரனை சாராமரிக்க வெட்டினர். இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தலைதெறித்து ஓடினர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk counselor murder near in vellore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->