என்ன கேட்டா ரஜினி, கமலை விட எடப்பாடி பழனிச்சாமியே மேல்.! காலை வாறிய நடிகர் கமலின் உடன் பிறப்பு.!! - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் நடிகரும், நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமான சாருஹாசன், ஏற்கனவே அவர் அளித்த ஒரு பெட்டியில், நடிகர்களின் அரசியலை விமரிசித்தது மட்டுமல்லாமல், பாட்டாளி மக்கள் காட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் கொள்கைகள், நடவடிக்கைகள் ஆகியவை சிறப்பாக உள்ளது என கூறினார்.

இந்த சூழ்நிலையில், தற்போது நடிகர் சாருஹாசன் அளித்துள்ள பேட்டியில் ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் ஓட்டு போடுவதை விட ஆட்சி செய்து வரும் தமிழரான எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஹலோ எப்.எம்மில்  ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசனின் பேட்டி ஒலிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் அவர், தமிழகத்தில் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட கருணாநிதி, கேரளாவை சேர்ந்த எம்.ஜி.ஆர், கர்நாடகாவில் இருந்து வந்த ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியை பிடித்து சாதனை செய்துள்ளனர்.

இதன் மூலம், புலம் பெயர்ந்து வந்த தலைவர்களுக்கு தமிழக மக்களிடம் வரவேற்பு உள்ளது என தெரிந்து கொள்ளலாம் என்று கூறிய அவர், ரஜினி, கமல் ஆகிய இருவரும் தங்களது சுயநலத்துக்காக வாழ்ந்தார்களே தவிர, மக்களுக்கு என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பினார். மேலும் கமலை விட ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளது. தமிழர்கள் ரஜினியை கடவுளாக பார்க்கிறார்கள் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ரஜினி பாஜகவுடனும், கமல் தமிழர் கட்சிகள் மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறிய சாருஹாசன், இவர்கள் இருவருக்கும் ஓட்டு போடுவதை விட தற்போது ஆட்சி செய்து வரும் தமிழரான எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதில் தவறில்லை என்றும் கூறிய அவர், பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor charuhaasan ask edappadi palanisami better than rajini, kamal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->