சூர்யா காலம் முடிந்துவிட்டது - சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்த நடிகர் பப்லு பிரித்விராஜ், பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் அவர் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா நடித்துள்ள 'அனிமல்' படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்திற்காக அவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பிருத்விராஜ் பதிலளித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், "சூர்யா மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகர்தான். ஆனால் அவர் கொஞ்சம் பயங்கரமானவர். தனக்கென்று இருப்பார். எனக்குத் தெரிந்து அவர் காலம் முடிந்துவிட்டது" என்று பேசியுள்ளார். 

அமீரின் 'பருத்திவீரன்' பட விஷயத்தில் ஏற்கெனவே சூர்யா வாய் திறக்காமல் இருப்பதால் அவர் மீது இணையத்தில் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். இந்த நேரத்தில் பப்லுவும் இப்படி பேசியுள்ளது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor bablu prithviraj speech about surya


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->