விழுப்புரத்தில் பரபரப்பு! திமுக தலைவர் முக ஸ்டாலினின் பயணத்தின் போது விபத்து! நான்கு பேர் பலி!
accident in villupuram by mk stalin pilot vehicle
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று கட்சி நிர்வாகிகளின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றிருந்தார். பின்னர் பிற்பகல் பாண்டிச்சேரியில் முதல் அமைச்சர் நாராயணசாமி நடத்திவரும் ஆளுநருக்கு எதிரான தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிப்பதற்காக பாண்டிச்சேரி சென்றார்.
இந்த பயணத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வளவனுர் அருகே ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக சென்ற காவல்துறை வாகனம், ஏற்படுத்திய விபத்தில் 3 பேர் பலியானதாக தகவல் வந்தது. பின்னர் மேலும் ஒருவர் என 4 பேர் இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின்க்கு பாதுகாப்பாக சென்ற வாகனம் மோதியதால் அங்கே கூடிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விழுப்புரத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கிறோம் என போலீஸ் தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டாலும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த விபத்து குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் இதுவரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்பது வேதனையான விஷயம். திமுகவினரும் மௌனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
accident in villupuram by mk stalin pilot vehicle