மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட விபரீதம்!! பெரம்பலூர் அருகே பரபரப்பு!!  - Seithipunal
Seithipunal


நெல்லையில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

அதில், சென்னை வேளச்சேரி  மற்றும் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர்கள் ராஜேஷ் குமார், ராஜா, விஜயக்குமார், வின்சன்ட் தேவன், ரோச் (வயது 45) ஆகிய 5 பேரும் வின்சென்ட் தேவன் ஆகியோர் பங்கேற்றனர்.  

பின்னர், அங்கிருந்து காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் பெரம்பலூர் அருகே மங்கலமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். 

அப்போது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இதனால், காரும் காருக்குள் இருந்தவர்களும் மிகுந்த காயத்தினை அடைந்தனர்.

மேலும், பயணம் செய்த ரோச் என்பவர் இடிபாடுகளில் சிக்கிய காரணத்தால் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீதமுள்ள நால்வரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

மங்களமேடு போலீஸ் விரைந்து சென்று அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accident in perambalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->