பெற்றோர் கண்முன்னே நடந்த கொடுமைச் சம்பவம்.! கடலூரில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை பலி.!!
பெற்றோர் கண்முன்னே நடந்த கொடுமைச் சம்பவம்.! கடலூரில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை பலி.!!
கடலூர் மாவட்டம், உள்ளேரிபட்டு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் தொழிலாளி. இவருடைய மனைவி இலக்கியா. இவர்களுக்கு கார்த்திக், நகுல் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் கார்த்திக்கும், நகுலுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இன்று காலை மோட்டார் சைக்கிளில் அவர்களை கருணாகரனும், அவரது மனைவியும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தனது மகன்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது, கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்ததால், சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த கருணாகரன் அந்த பள்ளத்தில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக திடீரென்று பிரேக் அடித்து நிறுத்தினார்.
அப்போது எதிர்பாராத விதமாக, வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த, அவரின் மனைவி இலக்கியா மடியில் வைத்திருந்த ஒரு வயது குழந்தை நகுல், சாலையில் தவறி கீழே விழுந்தது. அப்போது பின்னால் வந்த அரசு பஸ் சக்கரம் நகுல் தலையில் ஏறியது. இதில் தலை நசுங்கிய குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தங்கள் கண் முன்னே பலியான, தங்களது குழந்தையை கையில் எடுத்து கொண்டு பெற்றோர் கதறி அழுதனர். அங்கு திரண்டு இருந்த பொதுமக்களும் ஆத்திரத்தில் கண் கலங்கினார்கள்.
இதனையடுத்து, கடலூர் புதுநகர் போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். மேலும் எச்சரிக்கை பலகையோ, எந்தவித பேரிகார்டோ இல்லாமல் கடலூர் அடுத்த கோண்டூர் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
accident in cuddalore baby death