"நா பேச ஆரம்பிச்சா துரைமுருகன் ஒரு மாசத்துக்கு தூங்கவே மாட்டாரு" வெளியான தகவல்!! அதிர்ச்சியில் துரைமுருகன்!!
AC sanmugam says about duraimurugan
அதிமுக கூட்டணியில் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும், ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம்," வருமான வரி சோதனை துரைமுருகன் வீட்டில் நடைபெற்று உள்ளது.
இதற்கு பாஜகவும், நானும் தான் காரணம் என்று துரைமுருகன் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். சென்ற மாதம் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் கூட தான் ரெய்டு நடந்தது. ஆனால், நாங்கள் யாரும் பழி போடவில்லையே.
அண்ணன் துரைமுருகன் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அரசியல் நாகரீகம் கருதி இதுவரை அவரை நான் விமர்சிக்கவில்லை. நான் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் ஒரு மாதம் தூங்க மாட்டார்.
எந்த நாட்டில் இவர்களுக்கு என்ன உள்ளது என்பதை நான் கூறவேண்டியதாக இருக்கும். ரெய்டு எல்லாம் அவரவர் போனில் பேசுவதை வைத்து தான் உளவுத்துறை மூலம் அறிந்து சோதனைகள் நடத்தப்படும். இது கூட தெரியாமல் மற்றவர் மீது பழியைப் போடுவது மிக மிக தவறு." என அவர் கூறியுள்ளார்.
English Summary
AC sanmugam says about duraimurugan