இளைஞர்களின் வாழ்வை காவு வாங்கும் மது!! சேலத்தில் நேர்ந்த கொடூரம்!!  - Seithipunal
Seithipunal


சேலம் அருகே திருவாக்கவுண்டனூரை சேர்ந்த ராஜ சேகர் என்பவாது மகன் திருக்குமரன் (23) இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

இதனால், அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், மது அருந்த பெற்றோரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். வழக்கம் போல நேற்றும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் குடிக்க பணம் வேண்டுமென தந்தையிடம் தகராறு செய்துள்ளார். 

அவர் பணமில்லை என்றதும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், வாக்குவாதம் முற்றவே திடீரென விஷத்தை எடுத்து குடித்துள்ளார். அவரை மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young men suicide by poison


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->