சிறுமியிடன் சில்மிஷம் செய்த வாலிபர்.! அதனை ஆதரித்த வாலிபரின் பெற்றோர்..!!
சிறுமியிடன் சில்மிஷம் செய்த வாலிபர்.! அதனை ஆதரித்த வாலிபரின் பெற்றோர்..!!
மதுரை மாவட்டம், திருமங்கலம் கட்ராம்பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 20) பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார்.
இதே பகுதியைச் சேர்ந்தவர் ஒரு 17 வயது சிறுமி. இவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே குடி இருக்கின்றனர்.
அதனால், சாதாரணமாகப் பழகி உள்ளனர். இதைப் பயன் படுத்தி, ஆனந்த், ஒரு நாள் யாரும் இல்லாத நேரத்தில், அந்த சிறுமியை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, ஆனந்திடம் சண்டை போட்டு தப்பித்து வந்து விட்டார்.
தன் வீட்டிற்கு வந்து, தன் தாயிடம், ஆனந்த் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதைப் பற்றிக் கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்த, அந்த சிறுமியின் தாயார், இது குறித்து, ஆனந்த்தின் பெற்றோரிடம் புகார் கூறினார்.
அதற்கு அவர்கள், இதெல்லாம் பெரிய விஷயமா? என்று சர்வ சாதாரணமாகப் பேசி உள்ளனா்.
இதனால், அந்த சிறுமியின் தாய், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில், ஆனந்த் மற்றும் அவனது பெற்றோர் மீதும் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், ஆனந்தையும், அவரது பெற்றேரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
English Summary
a young man with a little girl