தொடர்வேலை பார்க்கக்கூறும் அரசு போக்குவரத்து கழகம்.!! கொதித்தெழுந்த நடத்துனர் செய்த காரியத்தால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அரசு மகிழுந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் ரமேஷ்குமார். இவர் சென்ற 3 மாதங்களுக்கு முன்னதாக திண்டுக்கல் பணிமனையில் இருந்து திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு மாற்றப்பட்டார். 

இவர் வாரத்திற்கு ஒரு முறை விடுமுறை கேட்டு தனது இல்லத்திற்கு சென்றுவரும் பழக்கத்தை திண்டுக்கல் போக்குவரத்து பணிமனையில் வைத்துள்ளார். அதன் படி திருப்பூர் பணிமனையில் விடுமுறை கேட்ட போது விடுமுறை வழங்க மறுத்துள்ளனர். 

மேலும் அங்குள்ள அதிகாரிகளுக்கு பழக்கமானவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்துவிட்டு., தொடர்ந்து வாகனத்தை இயக்க வற்புறுத்தி உள்ளனர். மேலும் அதிகாரிகள் பழக்கமானவர்களுக்கு அதிகளவில் பாரபட்சம் பார்ப்பதாக தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட துவங்கினார்.

இவர் நேற்று இரவு பணியை முடித்து விட்டு விடுமுறை கேட்டு வழங்காததான் காரணத்தால் நேற்று இரவு முதல் உண்ணாவிரதப்போராட்டத்தை துவங்கினார். இதனை அறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். 

காவல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை தோல்வியுற்றதை அடுத்து., சக நடத்துனர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவமானது திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A THIRUPUR GOVT. BUS DRIVER ANNOUNCE STRIKE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->