தற்கொலை செய்து கொண்ட கும்பகோணம் ஆசிரியை!! அதிர்ச்சி காரணம்?! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் அருகே உள்ள முத்து பிள்ளை மண்டபத்தை சேர்ந்தவர் ஆனபாய சோழனின் மனைவி ஆர்த்தி. இவர், நாச்சியார் கோவிலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார்.

ஆர்த்திக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து உள்ளது. இந்நிலையில் நேற்று ஆர்த்திக்கும், அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

அதனால் மனம் தளர்ந்த ஆர்த்தி, அவரது உறவினர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த ஆர்த்தி திடீரென மயங்கினார். இதனால் அதிர்ச்சியான உறவினர், உடனடியாக கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என கூறினார். இதுகுறித்து, உறவினர்கள் புகார் கொடுத்ததில் நாச்சியார்கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அவர் குடும்ப தகரால் இறந்ததால், தற்கொலையா? கொலையா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A teacher was suicide in kumbakonam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->